Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சின்ன படங்களுக்கு இனி தியேட்டரில் இடம் இல்லையா? – தயாரிப்பாளர் SR பிரபுவின் டிவீட்!

சின்ன படங்களுக்கு இனி தியேட்டரில் இடம் இல்லையா? – தயாரிப்பாளர் SR பிரபுவின் டிவீட்!
, வியாழன், 19 மே 2022 (10:36 IST)
தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள O2 திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கும் O2 திரைப்படம் ஓடும் இந்த படதின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் விரைவில் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு டைட்டில் வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட்பிரபுவின் உதவியாளர் ஜி எஸ் விக்னேஷ் என்பவர் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இந்த படம் ஓடிடியில் வெளியாவது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு கருத்தாக ‘சிறப்பாக உருவாக்கப்பட்டாலும், இதுபோல சின்ன படங்களுக்கு இனி திரையரங்குகளில் இடம் இல்லையா?. ஓடிடியின் வளர்ச்சிகளால் இதுதான் சின்ன படங்களுக்கு நிலையா?’ என்ற கருத்தும் எழுந்துள்ளது.

இது சம்மந்தமாக தயாரிப்பாளர் பிரபு பகிர்ந்துள்ள டிவீட்டில் “இது வெகு சீக்கிரமான முன் முடிவு. இது ஒரு மாறுதல் காலம்.  காலத்திற்கேற்றவாறு சிறிய படங்கள் திரையரங்குகளில் தனக்கான இடத்தைப் பிடிக்கும். அதே சமயம் தவிர்க்க முடியாத சில சேதாரங்களும் சரியாக திட்டமிடாத படங்களுக்கு நடக்கும்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஷ்யாவில் 300 திரையரங்குகளில் ரிலீஸ் ஆன கார்த்தி படம்!