Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் தள்ளிப் போகிறது ‘ஸ்பைடர்’

Advertiesment
மீண்டும் தள்ளிப் போகிறது ‘ஸ்பைடர்’
, வெள்ளி, 26 மே 2017 (13:01 IST)
மகேஷ் பாபு நடித்துவரும் ‘ஸ்பைடர்’ படத்தின் ரிலீஸ், மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


 


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துவரும் ‘ஸ்பைடர்’. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிவரும் இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் நாயகியாக நடித்துவருகிறார். வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும், முக்கிய கேரக்டர்களில் பரத்தும், ஆர்.ஜே.பாலாஜியும் நடிக்கின்றனர். ஹாரிஜ் ஜெயராஜ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்தப் படம், ஜூன் மாதம் 22ஆம் தேதி ரம்ஜான் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என முதலில் அறிவித்தனர். ஆனால், அவர்கள் ஷூட் செய்து வைத்திருந்த க்ளைமாக்ஸ் வேறொரு படத்தில் வந்துவிட்டதால், மறுபடியும் க்ளைமாக்ஸை ஷூட் செய்து வருகின்றனர். எனவே, ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி சுதந்திர தின விடுமுறைக்கு ரிலீஸ் செய்கிறோம் என்கிறார்கள்.

ஆனால், ஷூட் இன்னும் முடியாமல் இழுத்துக் கொண்டே போகிறது. அடுத்த மாதம் தான் ஷூட்டிங் முடியும் என்பதால், ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, செப்டம்பர் மாதத்துக்கு ரிலீஸைத் தள்ளி வைத்திருக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கெளதம் மேனனுக்குப் பதில் அனுராக் கஷ்யப்