Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எஸ்பிபி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவமனை அறிக்கையால் பரபரப்பு

எஸ்பிபி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவமனை அறிக்கையால் பரபரப்பு
, புதன், 19 ஆகஸ்ட் 2020 (17:21 IST)
எஸ்பிபி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்:
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை ஆரம்பத்தில் தேறி வந்தாலும் திடீரென அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் சற்று முன்னர் அவர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை அவரது உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு வெண்டிலட்டர் மற்றும் எக்கோ கருவியின் உதவியுடன் மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் குழுவும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.
 
எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் விரைவில் குணமாக வேண்டும் என கோடிக்கணக்கானோர் பிரார்த்தனை செய்து வரும் நிலையிலும் அவர் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் பெண் கேட்டு சென்றபோது ஆல்யா எனக்காக.... மனம் திறந்த சஞ்சீவ்!