Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் பெண் கேட்டு சென்றபோது ஆல்யா எனக்காக.... மனம் திறந்த சஞ்சீவ்!

நான் பெண் கேட்டு சென்றபோது ஆல்யா எனக்காக.... மனம் திறந்த சஞ்சீவ்!
, புதன், 19 ஆகஸ்ட் 2020 (17:08 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர்.

கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்மபுரியில் விஜய் நட்சத்திர கொண்டாட்டம் என்ற பெயரில் பிரமாண்ட விழா நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் முன்னிலையில் பேசிய நடிகர் சஞ்சீவ் ஆல்யா மானஸா இருப்பதாக அறிவித்தார்.

இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி ஆல்யா - சஞ்சீவ்விற்கு ஐலா என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்று தங்களது திருமணம் குறித்து பேசிய சஞ்சீவ், " சீரியலில் பொய்யாக நடித்தவருடன் திருமணம் செய்து வைக்க முடியாது என ஆல்யா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் நாங்கள் முறைப்படி ஆல்யாவை பெண்கேட்டு சென்றோம். ஆனால், வெவ்வேறு மதம் என்பதால் ஒப்புக்கொள்ளவில்லை. அந்த நேரத்தில் ஆல்யா எனக்காக ஸ்ட்ரோங்கா பேசினால். இருந்தும் அவர்கள் ஒப்புக்கொள்ளத்தால் நாங்கள் வேறு வழியின்றி காதல் திருமணம் செய்துகொண்டோம் என சஞ்சீவ் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எப்பதான் உங்களுக்கு வயசு ஆகுமோ தெரியலயே... குஷ்புவை கண்டு உருகும் ரசிகர்கள்!