Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாடகர் எஸ்பிபி நினைவிடத்திற்கு யாரும் வரவேண்டாம்.. மகன் எஸ்பிபி சரண் கோரிக்கை..!

Advertiesment
spb - spbalasubramaniam

Mahendran

, புதன், 4 ஜூன் 2025 (09:46 IST)
இன்று மறைந்த பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியனின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருடைய நினைவிடத்திற்கு யாரும் வர வேண்டாம் என்று அவரது மகன் எஸ்பிபி சரண் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
கடந்த 2020ஆம் ஆண்டு, கொரோனா பாதிப்பு காரணமாக எஸ். பி. பாலசுப்பிரமணியன் உயிரிழந்த நிலையில், அவருடைய உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த இடத்தில் நினைவிட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில், எஸ்பிபியின் பிறந்தநாள் அன்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான ரசிகர்கள் வரும் நிலையில், இந்த ஆண்டு ரசிகர்கள் வரவேண்டாம் என்று அவரது மகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால், ரசிகர்களின் பாதுகாப்பை கருதி, ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும், எனவே இந்த ஆண்டு மட்டும் எஸ்பிபி நினைவிடத்திற்கு ரசிகர்கள் வர வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!