Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்பிபி குறித்து ஊடகங்களில் பொய்யான தகவல்கள்: எஸ்பிபி சரண் வருத்தம்

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (20:36 IST)
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில நாட்களாக உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் எஸ்பிபி உடல்நிலை குறித்து தினமும் அவரது மகன் எஸ்பிபி சரண் அவர்கள் வீடியோவை வெளியிட்டு அப்டேட்களை தெரிவித்து வருகிறார்
 
அந்த வகையில் இன்று அவர் வெளியிட்ட வீடியோவில் எஸ்பிபி அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் தற்போதும் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளின் மூலம் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் எஸ்பிபி அவர்களுக்கு நுரையீரல் மாற்று சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாக ஊடகங்களில் வெளிவரும் தகவல் தவறானது என்றும் இந்த தகவலில் உண்மை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
எஸ்பிபி அவர்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக தான் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கும் தகவல் மட்டுமே உண்மை என்றும் மற்ற தகவல்களை நம்ப வேண்டாம் என்று எஸ்பிபி சரண் அவர்கள் தெரிவித்துள்ளார் 

தொடர்புடைய செய்திகள்

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்த கட்டுரையில்
Show comments