Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹீரோவாகிறார் இருட்டு அறை பட இயக்குனர்!

ஹீரோவாகிறார் இருட்டு அறை பட இயக்குனர்!
, ஞாயிறு, 15 டிசம்பர் 2019 (14:09 IST)
தமிழில் அடல்ட் காமெடி படமான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தை இயக்கிய இயக்குனர் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

தமிழிக் கௌதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. அடல்ட் ரக காமெடி படமான இதை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். ’இருட்டு அறையில் முரட்டு குத்து’ அடல்ட் இரட்டை அர்த்த வசனங்களுக்காகவும், காமெடிக்காகவும் இளைஞர்களால் பெரிதும் விரும்பப்பட்டாலும், பல சமூக நல அமைப்புகள் அந்த படத்திற்கு எதிர்ப்புகளை தெரிவித்திருந்தன.

ஆனாலும் நல்ல வசூல் பார்த்த அந்த படத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக “இருட்டு அறையில் முரட்டு குத்து 2’ ஐ இயக்க உள்ளார். சந்தோஷ் பி ஜெயக்குமார். இரண்டாம் பாகம் என்று பெயரிட்டிருந்தாலும் இரண்டு படங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் சந்தோஷ் பி ஜெயக்குமாரே ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சாம்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படமும் முதல் பாகம் போன்றே இரட்டை அர்த்த வசனங்கள், காட்சிகள் நிறைந்ததாய் இருக்கும் என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்கள் சபரிமலைக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் – யேசுதாஸ் சர்ச்சைக் கருத்து !