Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வீட்டில் மிராமிதுன்: கண்டுகொள்ளாத போட்டியாளர்கள்

Webdunia
திங்கள், 30 செப்டம்பர் 2019 (09:18 IST)
பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் மட்டும் கவின் மற்றும் தர்ஷன் என இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி விட்டதால் தற்போது லாஸ்லியா, ஷெரின், சாண்டி மற்றும் முகின் என நான்கு போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் பிக்பாஸ் வீடே வெறிச்சோடி உள்ளது 
 
 
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை கலகலப்பாக மாற்ற நான்கு சிறப்பு விருந்தினர்கள் வருகை தந்துள்ளனர். அவர்கள் மீராமிதுன், ரேஷ்மா, மோகன் வைத்யா மற்றும் பாத்திமா பாபு ஆகியோர் ஆவர். இந்த நால்வரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவுடன் வீட்டில் இருந்த போட்டியாளர்கள் அவர்களை கட்டிப்பிடித்து வரவேற்று உற்சாகம் அளிக்கின்றனர். இந்த நால்வரின் வருகையை அடுத்து பிக்பாஸ் வீடு மீண்டும் கலகலப்பாய் உள்ளது
 
இருப்பினும் ரேஷ்மா, பாத்திமா பாபு, மோகன்பாபு ஆகியோர்களை கண்டுகொண்ட அளவுக்கு மீராவை யாரும் கண்டுகொள்ளவில்லை. சர்ச்சைக்குரிய போட்டியாளரான மீராமிதுன்  மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்துள்ளதால் பிக் பாஸ் வீட்டில் ஏதாவது பிரச்சனை வருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த வாரம் ஞாயிறு அன்று இறுதி போட்டி நடைபெறவுள்ளது என்பதும், அன்றைய தினம் இந்த சீசனின் வெற்றியாளர் யார்? என்பது அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘மகாராஜா’ இயக்குனர் நித்திலனை அழைத்துப் பாராட்டிய ஆஸ்கர் வென்ற திரைக்கதை எழுத்தாளர்!

வட சென்னை 2 எப்போது தொடங்கும்… குபேரா பட விழாவில் தனுஷ் கொடுத்த அப்டேட்!

’மதயானை கூட்டம்’ இயக்குனர் விக்ரம் சுகுமாரன் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

முத்த மழை பாடல்! தீ பெஸ்ட்டா? சின்மயி பெஸ்ட்டா? - ஒப்பீடு குறித்து பாடகி சின்மயி கருத்து!

கமல் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டரை கொளுத்துவோம்! - கர்நாடக தியேட்டர்களுக்கு மிரட்டல்!

அடுத்த கட்டுரையில்