Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷெரினுக்கு ஒரு முக்கிய வேலை கொடுத்த கமல்!

ஷெரினுக்கு ஒரு முக்கிய வேலை கொடுத்த கமல்!
, ஞாயிறு, 29 செப்டம்பர் 2019 (09:23 IST)
பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படவுள்ள நிலையில் நேற்று சாண்டி காப்பாற்றப்பட்டு இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். தற்போது முகின், சாண்டி என இருவரும் இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டனர்.
 
இதனையடுத்து லாஸ்லியா, ஷெரின், தர்ஷன் ஆகிய மூவரில் ஒருவர் இன்று வெளியேற்றப்பட்டுவிட்டு, மீதியிருக்கும் இருவர் அடுத்த வாரம் இறுதிப்போட்டிக்கு செல்லுவர்.
 
இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் ‘நான் தான் இன்று வெளியேறுவேன் என எதிர்பார்க்கின்றேன்’ என்று கமலிடம் ஷெரின் கூற, உடனே ஷெரினுக்கு கமல் ஒரு முக்கிய வேலை கொடுக்கின்றார். அந்த வேலை என்னவாக இருக்கும் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் தான் தெரிந்து கொள்ள முடியும்
 
இந்த நிலையில் இன்றைய எவிக்சன் பட்டியலில் இருந்து ஷெரின், லாஸ்லியா ஆகிய இருவரும் காப்பாற்றப்படுவதாகவும், தர்ஷன் வெளியேறிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
 
கவின் திடீரென வெளியேறியதால் அவரது ஆதரவாளர்கள் சாண்டிக்கும், லாஸ்லியாவுக்கும் அதிக வாக்கு அளித்திருப்பதாகவும், அதனால் அவர்கள் இருவரும் காப்பாற்றப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது ஷெரினின் கேம் கடந்த வாரம் நன்றாக இருந்ததால் அவருக்கு வாக்குகள் அதிகம் கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளையராஜாவுடன் சண்டையா ? – சீனு ராமசாமி விளக்கம் !