Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாடர்ன் உலகில் மகளுக்கு இப்படி ஒரு மங்களகரமான பெயரா...! பிரசன்னா சொன்ன சீக்ரெட்!

மாடர்ன் உலகில் மகளுக்கு இப்படி ஒரு மங்களகரமான பெயரா...!  பிரசன்னா சொன்ன சீக்ரெட்!
, வியாழன், 13 பிப்ரவரி 2020 (12:20 IST)
தமிழ் சினிமாவின் எவர்கிரீன் நடிகையான சினேகா புன்னகை அரசி என அழைப்பட்டு ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டவர். இளமையான புன்னகைக்கு சொந்தக்காரரான சினேகா கடந்த 2000ம் ஆண்டு வெளிவந்த 'என்னவளே' படத்தின் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார்.
 
தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வந்த இவர் 2000ம் காலகட்டங்ககளில் இயக்குனர்களின் ராசியான நடிகையாக நடிகையாக பார்க்கப்பட்டார். தொடர்ந்து கமல்ஹாசனுடன் 'வசூல்ராஜா எம்பிபிஎஸ், விஜய்யுடன் 'வசீகரா', அஜித்துடன் 'ஜனா', விக்ரமுடன் கிங்', சுர்யாவுடன் 'உன்னை நினைத்து', தனுஷுடன் 'புதுப்பேட்டை', சிம்புவுடன் 'சிலம்பாட்டம்', உள்ளியிட்ட படங்களில் பரவலாக பேசப்பட்டாலும் ஆட்டோகிராப், பள்ளிக்கூடம், பார்த்திபன் கனவு, பிரிவோம் சந்திப்போம், போன்ற படங்கள் சினேகாவிற்கு பெரும் புகழை பெற்று தந்தது.
 
இதற்கிடையில் 2009ல் வெளிவந்த 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் நடிக்கும்போது அப்படத்தின் நாயகன் பிரசன்னாவை காதலித்த சினேகா பின்னர் மூன்று ஆண்டுகள் கழித்து அவரை கடந்த 2012ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். அதையடுத்து கடந்த 2015ல் இந்த தம்பதிக்கு விஹான் என்ற மகன் பிறந்தார். குழந்தைக்காக சிறிது காலம் சினிமாவில் ஒதுங்கியிருந்த சினேகா பின்னர் மீண்டும் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார்.
 
இதற்கிடையில் சமீபத்தில் பிரசன்னா - சினேகா ஒரு அழகிய பெண்குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து அண்மையில் பங்கேற்ற பேட்டி ஒன்றில் பேசிய பிரசன்னா, தனது மகளுக்கு ஆத்யந்தா என பெயர் வைத்துள்ளதாக கூறியுள்ளார். ஆத்யந்தா  என்றால் ஆதியும் அந்தமும் அற்றவள், முதலும் முடிவும் இல்லாதவள் Forever என கூறினார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் இணையும் விஜய்-அருண்ராஜா காமராஜ்! பரபரப்பு தகவல்