Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதராஸி படத்தின் ஓடிடி வியாபாரத்தால் அப்செட் ஆன சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன?

vinoth
திங்கள், 17 மார்ச் 2025 (15:33 IST)
தர்பார் படத்துக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இடைவேளை எடுத்துக் கொண்டார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். அதையடுத்து இப்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். முக்கியக் கதாபாத்திரங்களில் வித்யுத் ஜம்மால், விக்ராந்த் மற்றும் ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட 70 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
கடைசி கட்ட படப்பிடிப்பு விரைவில் நடக்கவுள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. படம் சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி வியாபாரம் சமீபத்தில் நிறைவடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. நெட்பிளிக்ஸ் நிறுவனம் 23 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாம். ஆனால் இதில் சிவகார்த்திகேயனுக்கு வருத்தம்தானாம். ஏனென்றால் அவரின் கடைசிப் படமான ‘அமரன்’ இதை விட இரண்டு மடங்குத் தொகைக்கு விற்பனை ஆனதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அழகுப் பதுமையாக மிளுரும் சம்யுக்தா மேனன்… கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

கருநிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய ஷிவானி…!

ரிலீஸ் வேலைகளைத் தொடங்கிய ‘வீர தீர சூரன்’ படக்குழு… டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மதராஸி படத்தின் ஓடிடி வியாபாரத்தால் அப்செட் ஆன சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன?

மாஸ்டர்ஸ் லீக் போட்டியிலுமா சண்டை போடுவீங்க… யுவ்ராஜை முறைத்த மேற்கத்திய வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments