Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட் தொடரில் சிவகாமி கதாபாத்திரத்திற்குக் குரல் கொடுத்த-தமிழ் வாய்ஸ் ஓவர் கலைஞர் வசந்தி.R!

பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட் தொடரில் சிவகாமி கதாபாத்திரத்திற்குக் குரல் கொடுத்த-தமிழ் வாய்ஸ் ஓவர் கலைஞர் வசந்தி.R!

J.Durai

, வெள்ளி, 7 ஜூன் 2024 (11:16 IST)
பாகுபலி மற்றும் மகிழ்மதி உலகில் கேள்விப்படாத, காணப்படாத மற்றும் சாட்சியமில்லாத பல நிகழ்வுகளும் கதைகளும் உள்ளன. டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் கிராஃபிக் இந்தியா சமீபத்தில் இந்தியாவின் ரசிகர்களின் விருப்பமான திரைப்பட ஃபிரான்சைஸியில் ஒன்றான ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்களின் ‘பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்’ என்ற அனிமேஷன் தொடரை அறிமுகப்படுத்தியது. இது, பாகுபலியும் பல்வாள் தேவனும் மகிழ்மதியின் மாபெரும் ராஜ்ஜியத்தையும் சிம்மாசனத்தையும் பாதுகாக்க, அதற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலான, பலரும் அறிந்திராத போர்வீரன், ரக்ததேவனுக்கு எதிராகக் கைகோர்க்கும் கதையாகும்..
 
கிராஃபிக் இந்தியா மற்றும் ஆர்கா மீடியாவொர்க்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள, பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட் தொலைநோக்கு பார்வையுள்ள S.S. ராஜமௌலி, ஷரத் தேவராஜன் & ஷோபு யார்லகட்டா ஆகியோரால் உருவாக்கப்பட்டது மற்றும் ஜீவன் J. காங் & நவின் ஜான் ஆகியோர் இதை இயக்கித் தயாரித்துள்ளனர்.
 
பாகுபலி ஃபிரான்சைஸியைச் சேர்ந்த சிவகாமி போன்ற ஒரு தனித்துவமான கதாபாத்திரத்திற்கு டப்பிங் செய்வது பெரும் சவாலாக இருந்தது. ஏனெனில் அந்த பாத்திரம் ஒரு சக்திவாய்ந்த ஆளுமை மற்றும் உணர்ச்சிகளின் பிரதிபலிப்பாகும். பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட் படத்தின் தமிழ் டப்பிங் பதிப்பிற்கு குரல் கொடுத்த வசந்தி R, சிவகாமி கதாபாத்திரத்திற்கு எப்படி டப்பிங் செய்யத் தயாரானார் என்பது குறித்த விவரங்களைப் பகிர்ந்துள்ளார்.
 
இது குறித்து பேசிய தமிழ் டப்பிங் கலைஞர் வசந்தி R பேசியதது....
 
 “சிவகாமியை சித்தரிப்பதற்கான எனது அணுகுமுறை அவரது பின்னணி, உறவுகள் மற்றும் சவால்களைப் புரிந்துகொள்வதை உள்ளடக்கியது. இது எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருந்தது, சிவகாமியின் சக்தி வாய்ந்த ஆளுமை மற்றும் அவரது கதாபாத்திரத்துடன் இணைந்த வலுவான உணர்ச்சிகளை வெளிப்படுத்த நான் மிகவும் கடினமாக உழைத்தேன். அவளுடைய வலிமை, உறுதிப்பாடு மற்றும் நெகிழ்ச்சி ஆகியவற்றை உடல் ரீதியாகவும் குரல் ரீதியாகவும் வெளிப்படுத்துவதில் நான் கவனம் செலுத்தினேன்.
 
பல்வேறு ஆராய்ச்சிகள் மற்றும் தயார்படுத்தல்களுக்குப் பிறகே, சிவகாமியை உண்மையாக உயிர்ப்பித்து, அவரது அரச இருப்பையும், கட்டளையிடும் அதிகாரத்தையும் குரலில் படம்பிடிப்பது எனக்குச் சாத்தியமானது” என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாடலாசிரியர் சினேகன் வெளியிட்ட "P2"இருவர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!