Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரியின் நில மோசடி வழக்கு – ஊராட்சி மன்றத் தலைவரிடம் விசாரணை!

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (16:26 IST)
சூரி கொடுத்த புகாரில் போலிஸார் சிறுசேரி ஊராட்சி மன்ற தலைவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

நிலம் வாங்கி தருவதாக 2.7 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பிரபல நடிகர் தயாரிப்பாளர் அன்பு வேலவன் மற்றும் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா ஆகியோர் மீது நடிகர் சூரி சமீபத்தில் காவல்துறையில் புகார் அளித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என்ற எண்ணத்தில் ரமேஷ் குடவாலா சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். பின்னர் முன் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில் இப்போது வழக்கை விசாரித்து வரும் குற்றப்பிரிவு போலீஸார் சிறுசேரி பகுதி ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் அவரது தம்பியிடம் நில ஆவணங்கள் பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலம் வீட்டுமனை நிலைமா, அல்லது விவசாய நிலைமா என்பது தொடர்பான சான்றிதழை அந்த ஊராட்சி மன்ற தலைவர் நிலத்தை விற்கும் பொது சூரியிடம் கொடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது. இருவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் அடுத்த படத்தை இயக்குவது தனுஷா? கார்த்திக் சுப்புராஜா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் யூடியூபர்கள்..!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments