Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாடகர் எஸ்.பி.பியின் உடல்நிலை கவலைக்கிடம் - மருத்துவமனை நிர்வாகம்

பாடகர் எஸ்.பி.பியின் உடல்நிலை கவலைக்கிடம் - மருத்துவமனை நிர்வாகம்
, வியாழன், 24 செப்டம்பர் 2020 (18:51 IST)
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ் பி பாலசுப்ரமண்யம் உடல்நிலை சீராக முன்னேறி வருவதாக அவர் மகன் எஸ் பி சரண் தெரிவித்திருந்த நிலையில், இன்று மீண்டும் அவர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
webdunia

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சமீபத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்துவிட்டதாகவும் அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாகவும் எஸ்பிபி சரண் அவர்கள் தெரிவித்திருந்தார். ஆனால் இன்று மீண்டும் அவர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளதாவது ; கடந்த 24 மணிநேரத்தில் எஸ்பிபியின் உடல் நிலை மோசமடைந்துள்ளது. அதனால் அதிகப்பட்ச உயிர்காக்கும் கருவிகளைக் கொண்டு , மருத்துவ நிபுணர்குழு சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’மதுரைக்காரன் மன உறுதி நோயிலுருந்து காப்பாற்றும்’’ – விஜயகாந்தை வாழ்த்திய வைரமுத்து!