Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

32 ஆண்டுகளில் 74 முறை பாம்புகளால் கடிக்கப்பட்ட நபர்… வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கிய மனிதர்!

32 ஆண்டுகளில் 74 முறை பாம்புகளால் கடிக்கப்பட்ட நபர்… வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கிய மனிதர்!
, வெள்ளி, 4 டிசம்பர் 2020 (16:50 IST)
ஆந்திராவில் ஒரு நபரை இதுவரை 74 முறை பாம்புகள் கடித்துள்ளதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திரா மாநிலத்தில் சித்தூர் மாவட்டம் கும்மரா குடா கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (45). இவரை 32 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முறை பாம்பு கடித்துள்ளது. பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் காப்பாற்றப்பட்டுள்ளார். ஆனால் அதன் பிறகு அவரை தொடர்ந்து பாம்புகள் கடிப்பது வாடிக்கையாகியுள்ளது. இதுவரை 74 முறை அவரை பாம்புகள் கடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் பாம்புகளுக்கு பயந்து சுப்ரமண்யன் ஊரை விட்டே சென்று பெங்களூரில் வசிக்க ஆரம்பித்துள்ளார். ஆனால் அங்கும் அவரை பாம்பு கடித்ததால் இப்போது வீட்டை விட்டே வெளியே செல்லாமல் முடங்கிக் கிடக்கிறார். இந்நிலையில் பாம்புகள் கடியில் சிக்கி சிகிச்சைப் பெறுவதற்கே அவரின் வருமானத்தில் பெரும்பகுதி செலவிடப்படுவதாக புலம்பியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஞ்ஞானிகள் சிக்னல் குடுத்துட்டா தடுப்பூசி போட ஆரம்பிச்சிடலாம்! – பிரதமர் மோடி