Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

50 ஆவது படத்தை பிரம்மாண்டமாக எடுக்க ஆசைப்படும் சிம்பு!

50 ஆவது படத்தை பிரம்மாண்டமாக எடுக்க ஆசைப்படும் சிம்பு!
, வெள்ளி, 30 டிசம்பர் 2022 (09:51 IST)
சிம்பு நடிப்பில் பத்து தல படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன.

கன்னடத்தில் ஹிட்டடித்த மப்டி படத்தை தமிழில் முதலில் அதே பெயரில் ரீமேக் செய்ய முடிவெடுத்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இந்த படத்தின் நாயகனாக கௌதம் கார்த்திக்கும், முக்கியமான ஒரு வேடத்தில் சிம்பு நடிக்கவும் ஒப்பந்தமாக கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கும் மேல நடந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. பத்து தல படம் சிம்புவின் 48 ஆவது படம் (குழந்தை நட்சத்திரமாக நடித்தது உட்பட)

இதையடுத்து சிம்பு அடுத்து எந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்று இன்னும் அறிவிக்கவில்லை. இதற்கிடையில் சிம்பு, அடுத்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்க உள்ளதாகவும், அந்த படத்துக்காக இப்போது தற்காப்பு கலை பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே போல சுதா கொங்கரா மற்றும் மிஷ்கின் ஆகியோடிரிடமும் கதைக் கேட்டுள்ளாராம். இவர்களில் ஒருவர்தான் சிம்புவின் 50 ஆவது படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்‌ஷராஹாசனுக்காக கமல் கொடுத்த கிறிஸ்துமஸ் பரிசு!