Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஓராண்டு நிறைவு – நடிகை உற்சாக டிவீட்!

அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஓராண்டு நிறைவு – நடிகை உற்சாக டிவீட்!
, சனி, 8 ஆகஸ்ட் 2020 (19:01 IST)
அஜித் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி ஓராண்டை நிறைவு செய்துள்ளது.

எச் வினோத் இயக்கத்தில் அஜீத், ஷ்ரதா ஸ்ரீநாத், வித்யா பாலன் உள்ளிட்டோர் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் உருவான  நேர்கொண்ட பார்வை  படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி வெளியானது. வழக்கத்துக்கு மாறாக அஜித் மிகவும் கதையம்சம் உள்ள படமாக நீண்ட நாட்களுக்கு பின்னர் தேர்வு செய்து நடித்திருந்தார். மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்த படம் இப்போது ஓராண்டை நிறைவு செய்துள்ளது.

இந்நிலையில் இதுபற்றி ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தங்கள் வாழ்த்துகளை தெரிவிக்க படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரத்தா ஸ்ரீநாத் படம் பற்றியும் அஜித் பற்றியும் தன்னுடைய மகிழ்ச்சியான அனுபவங்களை வெளியிட்டுள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘மீரா  மிகவும் வலிமையான மற்றும் எமோஷனலான பெண். எப்போதும் தன் கையில் ஒரு ரப்பர் பேண்டையும் அணிந்திருப்பார், வெப்பம் அதிகமாகும் சமயத்தில் அதைக் கொண்டு தன் தலைமுடியைக் கட்டிக் கொள்வார். அவர் சுயமாக சிந்திக்கக் கூடியவர். மீராவைப் போல வாழுங்கள். தோல்விகளை வெற்றிகளாக மாற்றும் ஒரு மெகா ஸ்டார். நாம் பேசத் தயங்கும் விஷயங்களைப் பேசும் ஒரு படத்தின் ஒரு அங்கம். அஜித்துடன் சேர்ந்து நடித்தது ஒரு கௌரவம்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பார்ட்டி திரைப்படம் இன்னும் ஏன் வெளியாகவில்லை – வெங்கட்பிரபு வருத்தம்!