Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷிவானி ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி – கொரோனாவால் பறிபோன வாய்ப்பு!

ஷிவானி ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி – கொரோனாவால் பறிபோன வாய்ப்பு!
, செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (15:58 IST)
இன்ஸ்டாகிராம் ஹாட் கேர்ளாக சுற்றி வரும் ஷிவானி அவர் நடித்துவந்த இரட்டைரோஜா சீரியலில் இருந்து விலகியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான “கடைக்குட்டி சிங்கம்” என்ற நாடகத்தில் ஒரு குணச்சித்திர வேடத்தில் நடித்ததன் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.

அதைத் தொடர்ந்து “ரெட்டை ரோஜா” சீரியலில் இரட்டை வேடத்தில் கதாநாயகியாகவும் வில்லியாகவும் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். தற்ப்போது கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் டான்ஸ் , டிக் டாக், கொரோனா விழிப்புணர்வு, வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். அது போல ஷிவானி வெளியிடும் கவர்ச்சியான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் அவருக்கென்றே ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அவர் இப்போது இரட்டை ரோஜா சீரியலில் இருந்து விலகியுள்ளார். கொரோனா லாக்டவுன் காரணமாக அவரால் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியவில்லை என்பதே அதற்கான காரணம் என சொல்லப்படுகிறது. அவருக்கு பதிலாக சித்து +2 படத்தில் நடித்த சாந்தினி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர் படத்தில் நான் வில்லனா? சென்னை 28 புகழ் நடிகர் விளக்கம் !