Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆபாச பட விவகாரம்; என் கணவர் அப்பாவி! – நடிகை ஷில்பா ஷெட்டி!

ஆபாச பட விவகாரம்; என் கணவர் அப்பாவி! – நடிகை ஷில்பா ஷெட்டி!
, சனி, 24 ஜூலை 2021 (12:51 IST)
ஆபாச பட விவகாரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தன் கணவர் அப்பாவி என நடிகை ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகையும் தமிழில் ஒரு சில படங்களில் நடித்தவருமான ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா. இவர் மும்பையில் நேற்று திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். ஆபாச படங்களை தயாரித்து செல்போன் செயலிகள் மூலம் இவர் பணம் சம்பாதிப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்

ராஜ்குந்த்ராவின் கைது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் 3 பேர் தங்களை கட்டாயப்படுத்தி ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாக கூறி ராஜ்குந்த்ரா மீது புகார் அளித்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு நீதிமன்றம் 3 நாட்கள் போலிஸ் காவல் அளித்து சிறையில் அடைத்துள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள நடிகை ஷில்பா ஷெட்டி தன் கணவருக்கும் ஆபாச பட தயாரிப்புக்கும் தொடர்பில்லை என்றும், அவர் ஒரு அப்பாவி என்றும் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிச்சைக்காரன் 2: இயக்குனர் அவதாரமெடுக்கும் விஜய் ஆண்டனி!