Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிக்பாஸ் கொடுத்த பச்சை மிளகாய் டாஸ்க்: காரசாரமாகும் போட்டியாளர்கள்

பிக்பாஸ் கொடுத்த பச்சை மிளகாய் டாஸ்க்: காரசாரமாகும் போட்டியாளர்கள்
, திங்கள், 23 செப்டம்பர் 2019 (09:14 IST)
ஒவ்வொரு வாரமும் திங்களன்று ஒரு போட்டியாளரை வெளியேற்ற நாமினேஷன் செய்வது வழக்கம். ஆனால் இந்த வாரம் வெளியேற்றப்படுவதற்கு பதிலாக காப்பாற்றப்படும் நபர்கள் குறித்த விபரங்களை பிக்பாஸ் கேட்கின்றார்.
 
 
முதலில் தர்ஷன் கன்பக்சன் அறைக்கு அழைக்கப்படும் நிலையில் ‘எனக்கு தெரிந்து ஷெரினை யாரும் காப்பாற்ற மாட்டார்கள் என்று நினைக்கின்றேன். அதனால் நான் ஷெரினை காப்பாற்ற விரும்புகிறேன் என்று தர்ஷன் கூற, அப்படியென்றால் நீங்கள் ஒரு பச்சை மிளகாயை சாப்பிட வேண்டும் என்று பிக்பாஸ் கூறுகிறார். ஷெரினுக்காக காரசாரமான பச்சை மிளகாயை தர்ஷன் சாப்பிடுகிறார்.
 
அதன்பின் இன்னொரு பச்சை மிளகாயை சாப்பிட்டுவிட்டு சாண்டியையும் காப்பாற்ற அவர் கூறுகிறார். எனவே ஷெரினும், சாண்டியும் தர்ஷனால் காப்பாற்றப்பட்டுள்ளனர். இனிவரும் போட்டியாளர்கள் யார் யாரை காப்பாற்ற போகின்றனர் என்பது இன்றைய நிகழ்ச்சியில் தான் தெரியவரும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹாலிவுட் படத்தில் நடிக்கின்றார் ஜிவி பிரகாஷ்