Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷங்கரின் 1000 கோடி ரூபாய் படத்தைத் தயாரிக்க போகும் நிறுவனங்கள்!

Webdunia
ஞாயிறு, 11 செப்டம்பர் 2022 (14:26 IST)
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கே ஜி எஃப் யாஷ் நடிக்க உள்ள பிரம்மாண்ட திரைப்படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அதோடு தற்போது ராம்சரண் தேஜா நடிக்கும் உள்ள தெலுங்கு படம் ஒன்றையும் இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்கிறார். படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க உள்ளார்.

இந்நிலையில் இப்போது இயக்குனர் ஷங்கர் எழுத்தாளரும், மக்களவை உறுப்பினருமான சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலைப் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பாகுபலி மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று படங்களின் வெற்றியை அடுத்து மறுபடியும் ஒரு வரலாற்று புனைவு திரைப்படம் உருவாக உள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த படத்தில் நடிக்க உள்ளது கே ஜி எஃப் நடிகர் யாஷ்தான் என்று இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த படத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. நெட்பிளிக்ஸ் நிறுவனம், பென் மீடியா உள்ளிட்ட சில நிறுவனங்கள் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாழை பட 25-வது நாள் கொண்டாட்டம் வெற்றி விழா!!

சூர்யா வின் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி எப்போது? சூப்பர் அறிவிப்பு..!

தனுஷ் விவகாரத்தில் ஃபெப்சி அமைப்பு தலையீடு: தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்.

’கோட்’ படத்தின் 13 நாள் வசூல்.. தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

என்னது ரூ.1000 கோடியா? ரூ.500 கோடி கூட வரல.! கோட் படத்தின் வசூல் இவ்வளவுதானா.?

அடுத்த கட்டுரையில்
Show comments