Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியன் 2 வால் மன உளைச்சலில் இருக்கும் ஷங்கர்… என்ன செய்கிறார் தெரியுமா?

இந்தியன் 2 வால் மன உளைச்சலில் இருக்கும் ஷங்கர்… என்ன செய்கிறார் தெரியுமா?
, சனி, 19 செப்டம்பர் 2020 (12:48 IST)
இந்தியன் 2 படப்பிடிப்பு இப்போதைக்கு தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படாததால் மன உளைச்சலில் இருக்கிறாராம் ஷங்கர்.

இயக்குனர் ஷங்கரின் இந்தியன் 2 படம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து முடியாமல் இழுத்துக் கொண்டே போகிறது. கமலின் அரசியல், படப்பிடிப்புத் தளத்தில் விபத்து, கொரோனா லாக்டவுன் என பலத் தடங்கல்கள் வரிசையாக வந்தவண்ணம் இருந்தன. இந்நிலையில் இப்போது கமலோ லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

இதனால் தெலுங்கு நடிகர் பிரபாஸை வைத்து படம் இயக்கும் முயற்சியில் இறங்கிய ஷங்கர் அதுவும் ஈடேறாததால் மன உளைச்சலில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அடிக்கடி தனது திரையுலக நண்பர்களான மிஷ்கின் மற்றும் லிங்குசாமி ஆகியவர்களை சந்தித்து மனம் விட்டு பேசி வருகிறாராம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொள்ளை அழகில் ரித்விகா - கலக்கலான ரீசன்ட் போட்டோஸ்!