Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் செய்வதை சரியென்று உணர்த்தியதற்கு நன்றி- ஷாருக் கான் உருக்கம்!

vinoth
புதன், 31 ஜனவரி 2024 (07:44 IST)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு திரும்பியுள்ளார்.

இதையடுத்து 2023 ஆம் ஆண்டில் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஹிட்டடித்து 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தன. இந்நிலையில் அவர் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கிய டன்கி திரைப்படமும் வெளியாகி 500 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.

இந்நிலையில் ரசிகர்களுடனான சந்திப்பு ஒன்றில் பேசிய ஷாருக் கான் “எனது முந்தைய படங்கள் சரியாக போகாததால் நான் தவறான படங்களை எடுத்துவிட்டேனோ என நினைத்தேன். ஆனால் என்னுடைய டன்கி, ஜவான் உள்ளிட்ட படங்களை மக்கள் அதிகமாக நேசித்தார்கள் என நம்புகிறேன். பல ரசிகர்கள் நான்கு ஆண்டுகள் இடைவெளி எல்லாம் வேண்டும். நான்கு மாதங்கள்  வேண்டுமானால் பரவாயில்லை எனக் கூறி என்னை நெகிழ வைத்து விட்டார்கள். நான் செய்வது சரி என்று உணர்த்தியதாக அனைவருக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்… முதல் நாள் வசூலில் அடிவாங்கிய ‘வீர தீர சூரன்’

தென்னிந்திய நடிகர்கள் அதை செய்வதில்லை… வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்த சல்மான் கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments