Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆகஸ்ட் 15 ல் அட்லி பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஆகஸ்ட் 15 ல் அட்லி பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
, வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (16:16 IST)
இயக்குனர் அட்லி ஷாருக் கானை வைத்து இயக்கும் இந்தி படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 180 நாட்களில் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது.

ராஜா ராணி, தெறி, மெர்சல் , பிகில் என அட்லீ தொடர்ந்து இயக்கிய படங்கள் அனைத்தும் ஹாட்ரிக் வெற்றி அடித்தது. அதை தொடர்ந்து தான் இயக்கப்போகும் 5 வது படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை ஹீரோவாக நடிக்க சம்மதிக்க வைத்து விட்டார். இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்க்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரவை நடிக்க வைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த படத்துக்கான வேலைகள் இப்போது தீவிரமாக நடந்து வருகின்றன. முதல் கட்ட படப்பிடிப்பு துபாயில் நடக்க உள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த படம் தமிழில் விஜயகாந்த் நடிப்பில் உருவான பேரரசு படத்தின் தழுவல் எனவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திரா காந்தியாக லாரா தத்தா… பெல் பாட்டம் டிரைலர் சர்ப்ரைஸ்!