Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

180 நாட்கள் ஷூட்டிங் பிளான் செய்த அட்லி… அதிர்ச்சியில் பாலிவுட்!

180 நாட்கள் ஷூட்டிங் பிளான் செய்த அட்லி… அதிர்ச்சியில் பாலிவுட்!
, வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (09:41 IST)
இயக்குனர் அட்லி ஷாருக் கானை வைத்து இயக்கும் இந்தி படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 180 நாட்களாக நடக்க உள்ளதாம்.

ராஜா ராணி, தெறி, மெர்சல் , பிகில் என அட்லீ தொடர்ந்து இயக்கிய படங்கள் அனைத்தும் ஹாட்ரிக் வெற்றி அடித்தது. அதை தொடர்ந்து தான் இயக்கப்போகும் 5 வது படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை ஹீரோவாக நடிக்க சம்மதிக்க வைத்து விட்டார். இந்த படத்தின் ப்ரீ ப்ரோடுக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரவை நடிக்க வைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நாட்கள் மொத்தம் 180 நாட்கள் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 6 மாத காலம் ஷூட்டிங் என்பதால் இந்த படம் ரிலீஸாக எப்படியும் இன்னும் 2 வருடங்கள் ஆகிவிடும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை யாஷிகாவிற்கு வனிதா அறிவுரை!