Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மூஞ்சில ஆசிட் ஊத்திருவேன்: பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு கொலை மிரட்டல்!!

மூஞ்சில ஆசிட் ஊத்திருவேன்: பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு கொலை மிரட்டல்!!
, ஞாயிறு, 6 ஜனவரி 2019 (12:36 IST)
இந்தி பிக்பாசில் டைட்டில் வின்னரான தீபிகா மீது ஆசிட் வீசப்போவதாக நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்திருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட்டில் சின்னத்திரை நாயகியாக வலம் வருபவர் தீபிகா காகர். இவருக்கும் ரவுனக் மேத்தா என்பவருக்கும் திருமணம் நடைபெற்று பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து மோதலால் இவர்கள் விவாகரத்து பெற்றனர்.
 
இந்நிலையில் இந்தி பிக்பாஸ் சீசன் 12 ல் பங்குபெற்ற தீபிகா, டைட்டிலை தட்டிச்சென்றார். இது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஏனென்றால் ஸ்ரீசாந்த் தான் டைட்டிலை தட்டிச்செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை நடத்திய தொலைக்காட்சி தீபிகாவிற்கு சாதகமாக நடந்துகொண்டது என ஸ்ரீசாந்தின் ரசிகர்கள் சொல்லி வந்தனர்.
webdunia
ஆனால் ஆர்வக்கோளாறில் ஸ்ரீசாந்தின் ரசிகர் ஒருவர் உன் மூஞ்சில் ஆசிட் ஊத்துவேன் என டிவிட்டரில் தீபிகாவிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னால்தான் ரஜினிக்கு அவமானம்! – புலம்பித் தள்ளிய கார்த்திக் சுப்பராஜ்..