Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிசம்பர் 31 ல் ரிலீஸாகும் செல்வராகவனின் இரண்டு படங்கள்!

டிசம்பர் 31 ல் ரிலீஸாகும் செல்வராகவனின் இரண்டு படங்கள்!
, சனி, 26 டிசம்பர் 2020 (16:25 IST)
செல்வராகவன் இயக்கிய மிகப்பெரிய ரசிகர்களைக் கொண்ட புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் டிசம்பர் 31 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

இயக்குனர் செல்வராகவன் மிக இளம் வயதிலேயே இளைஞர்களாலும் தீவிர சினிமா ரசிகர்களாலும் கொண்டாடப்படும் திரைப்படங்களை எடுத்தவர். ஆனால் அவர் இயக்கி கடைசியாக வரவேற்பைப் பெற்ற திரைப்படம் என்றால் அது ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம்தான். அதற்குப் பிறகு 10 ஆண்டுகளாக அவர் வெற்றிப் படங்களே கொடுக்கவில்லை.

இந்நிலையில் இப்போது திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் கொரோனா அச்சத்தால் மக்கள் திரையரங்குகளுக்கு வருவதில்லை. அதனால் அவர்களைக் கவரும் விதமாக செல்வராகவனின் புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் டிசம்பர் 31 ஆம் தேதி வெளியாக உள்ளதாம்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தளபதின்னு சொல்லாதீங்க விஜய் நியாபகம்தான் வருது – திமுக எம் எல் ஏவுக்கு ஷாக் கொடுத்த பெண்!