Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயிரத்தில் ஒருவன் 2 வில் தனுஷ்& கார்த்தி… இயக்குனர் செல்வராகவன் பகிர்ந்த தகவல்!

vinoth
ஞாயிறு, 6 ஏப்ரல் 2025 (09:12 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான செல்வராகவன் இயக்கத்தில் உருவாக்கிய சாகச திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன்ம். அந்த படம் ரிலீஸின் போது பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் இப்போதுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிரது. இந்நிலையில்  செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படத்தின்  இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக தகவல் தெரிவித்து, இதன் போஸ்டரை சில ஆண்டுகளுக்கு முன்னர் செல்வராகவன் வெளியிட்டார்.

ஆனால் இதுவரை அந்த படம் குறித்த மேலதிக தகவல் எதுவும் வெளியாகவில்லை. அதுமட்டுமில்லாமல் செல்வராஜவனின் படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெறுவதில்லை. அதனால் அவரை நம்பி தற்போது தயாரிப்பாளர்கள் வரமாட்டார்கள் எனவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ள செல்வராகவன் “ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை இயக்க வெறித்தனமாகக் காத்திருக்கேன். அந்த படத்தை தனுஷை வைத்து எடுப்பதாக அறிவித்தோம். ஆனால் கார்த்தி இல்லாமல் அந்த படத்தைத் தொடங்க முடியாது. ஒரு வருடம் நடிகர்கள் கால்ஷீட் தேவைப்படுகிறது.” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மொய் விருந்தில் வெற்றி பெறுவாளா தமிழ்செல்வி? பரபரக்கும் திருப்பங்களுடன் சின்ன மருமகள் நெடுந்தொடர்!

‘ஆண்பாவம்’ புகழ் பழம்பெரும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி காலமானார்!

மாமன் படத்துக்கு வெற்றி விழா கிடையாது… நடிகர் சூரி சொல்லும் காரணம்!

‘புல்லரிக்குது தம்பி. என் அப்பா ஞாபகம் வந்துடுச்சு’.. டூரிஸ்ட் பேமிலி இயக்குனரைப் பாராட்டிய ஆட்டோ ஓட்டுனர்!

இயற்கை சீற்றத்துக்கு மத்தியில் ‘மதராஸி’ படத்தின் ஷூட்டிங்கை முடித்த முருகதாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments