Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உங்கள் கதை முடிந்தது என்றால் உலகத்துக்கு சந்தோஷம்… செல்வராகவன் ட்வீட்!

உங்கள் கதை முடிந்தது என்றால் உலகத்துக்கு சந்தோஷம்… செல்வராகவன் ட்வீட்!
, புதன், 26 ஏப்ரல் 2023 (13:41 IST)
இயக்குனர் செல்வராகவனின் சமீபத்தைய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் மோசமான விமர்சனங்களையும் பெற்று வருகின்றன. இந்நிலையில் இப்போது அவர் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார். மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார். இடையில் அவர் நடிகராக அறிமுகமான ‘சாணிக்காயிதம்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய திரைப்படங்கள் அவருக்குபாராட்டுகளைப் பெற்றுத்தந்தன. அடுத்து பகாசூரன் என்ற திரைப்படம் ரிலீஸாகி கணிசமான கவனத்தை ஈர்த்தது. அதற்குப் பின்னர் இன்னும் அவர் அடுத்து இயக்கும் படத்தைப் பற்றிய தகவலை தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில் செல்வராகவன் டிவிட்டரில் அடிக்கடி தனது அனுபவப் பதிவுகளைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது “ இங்கே உங்கள் கதை முடிந்தது என்றால் உலகத்துக்கு சந்தோஷம்.  கூத்தாடும். உங்களை புதைத்துவிட்டுதான் அடுத்த வேலை பார்க்கும்.  அங்கிருந்து மீண்டு வருவதுதான் உங்கள் சாதனை” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகைகளுக்கும் சமமான சம்பளம்… மதுபாலாவின் கோரிக்கை!