Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயலலிதாவின் கடைசி படத்தில் கதாநாயகனாக நடித்தவர் சரத்பாபு!

ஜெயலலிதாவின் கடைசி படத்தில் கதாநாயகனாக நடித்தவர் சரத்பாபு!
, செவ்வாய், 23 மே 2023 (14:21 IST)
தமிழ் சினிமாவில் முள்ளும் மலரும், முத்து, வேலைக்காரன், என 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சரத்பாபு. பெரும்பாலான படங்களில் இரண்டாவது ஹீரோவாக நடித்து தனது மென்மையான குரலால் ரசிகர்களைக் கவர்ந்தவர் சரத்பாபு. 71 வயதாகும் இவர் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் இயற்கை எய்தினார்.

ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்றுக் கொண்ட சரத் பாபு நேற்று காலமானார். இதனை அடுத்து கமல்ஹாசன் ரஜினிகாந்த் உள்பட பல திரை உலக பிரபலங்கள் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர்.

இவரை பற்றி பலரும் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து வரும் நிலையில் ஜெயலலிதாவோடு இவருக்கு இருக்கும் தொடர்பு பற்றி தெரியவந்துள்ளது. ஜெயலலிதா சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்துவிட்டு 1980 ஆம் ஆண்டு நதியை தேடிவந்த கடல் என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவருக்கு சரத்பாபுதான் ஜோடியாக நடித்தார். இதுதான் ஜெயலலிதா நடித்த கடைசி திரைப்படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனிமேல் நான் டெர்மினேட்டர் இல்லை… விலகிய அர்னால்ட்!