Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சசிகுமாருக்கு அடுத்து எனக்கு பிரசாந்த் சார்தான்… சமுத்திரக்கனி நெகிழ்ச்சி!

சசிகுமாருக்கு அடுத்து எனக்கு பிரசாந்த் சார்தான்… சமுத்திரக்கனி நெகிழ்ச்சி!

vinoth

, புதன், 7 ஆகஸ்ட் 2024 (16:35 IST)
பிரசாந்த் நடிப்பில் அவரின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள அந்தகன் திரைப்படம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படம் ‘அந்தாதூன்’ என்ற இந்தி படத்தின் ரீமேக். நீண்ட நாட்களாக மார்க்கெட்டில் இல்லாத பிரசாந்த், இந்த படம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என நம்பி எதிர்பார்த்திருக்கிறார்.

அந்தகன் படத்தில் பிரசாந்துடன், பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரக்கனி, வனிதா விஜயகுமார் மற்றும் கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி “எனக்கு சசிகுமார்தான் நெருங்கிய நண்பன். ஒருமுறை அவன் கையில் இருந்த கடிகாரம் அழகாக இருக்கிறதே என்று பார்த்தேன். உடனே என்னை வாட்ச் ஷோரூமுக்கு அழைத்து சென்று உனக்குப் பிடித்த வாட்ச்சை வாங்கிக்கொள் என சொன்னான். நான் உன் கையில் இருப்பதுதான் எனக்கு பிடித்திருக்கிறது என சொன்னேன். உடனே அதை என் கையில் கொடுத்துவிட்டு அவன் புதிதாக வாங்கிக் கொண்டான்.

அதேபோலதான் பிரசாந்த் சாரும். ஒருநாள் அவர் அணிந்திருந்த கண்ணாடியைப் பார்த்து அழகாக இருக்கிறதே என்று சொன்னேன். உடனே அன்றைக்கு மாலையே மூன்று கண்ணாடிகளை வரவழைத்து எனக்குக் கொடுத்துவிட்டார். சசிகுமாருக்கு பிறகு பிரசாந்த் சார் அதுபோல எனக்கு செய்துள்ளார்” எனக் கூறி நெகிழ்ந்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கம் போல ஜொலிக்கும் ஆடையில் மின்னும் ஜான்வி கபூர்!