Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலிவுட்டில் கவனம் செலுத்தும் சமந்தா!

பாலிவுட்டில் கவனம் செலுத்தும் சமந்தா!
, புதன், 13 அக்டோபர் 2021 (11:51 IST)
விவாகரத்துக்குப் பின் மனதளவில் தன்னைத் தேற்றிக்கொள்ள சமந்தா பாலிவுட் படங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் கடந்த 2017ல் திருமணமான நிலையில் சமீபத்தில் அவர்கள் தங்கள் விவாகரத்தை அறிவித்துள்ளனர். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்துக்கு பலரும் பல காரணங்களை பேசி வந்த நிலையில், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என சமந்த கடந்த வாரம் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து விவாகரத்துக்கு சமந்தாதான் காரணம் என்றும், அவர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்தார் என்றும் குழந்தை பெற்றுக்கொள்வதை விரும்பவில்லை என்றும் அவர் மேல் அவதூறுகள் வைக்கப்பட்டன. இதையடுத்து அவருக்கு நெருக்கமானவர்கள் ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் எதிர்மறையான சூழலில் இருந்து விலகும் விதமாக சமந்தா படங்களில் மறுபடியும் அதிகளவில் நடிக்க முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதிலும் பாலிவுட் படங்களுக்கான வாய்ப்புகள் வருவதால் மும்பையில் புதிதாக ப்ளாட் ஒன்றில் அவர் குடியேற உள்ளதாக சொல்லப்படுகிறது. பேமிலி மேன் 2 வெப் தொடர் அவருக்கு உலகம் முழுவதும் கவனத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நெடுமுடி வேணுவுக்கு மம்மூட்டியின் நெகிழ்ச்சியான அஞ்சலி!