Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த வேடத்தில் நடிப்பது எப்போதும் என் கனவாக இருந்தது- சமந்தா பூரிப்பு!

இந்த வேடத்தில் நடிப்பது எப்போதும் என் கனவாக இருந்தது- சமந்தா பூரிப்பு!
, செவ்வாய், 16 மார்ச் 2021 (08:35 IST)
நடிகை சமந்தா நடிக்க உள்ள சகுந்தலை என்ற புராண படத்தின் பூஜை நேற்று தொடங்கியது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக இருப்பவர் குணசேகர். இவர் பல ஹிட் படங்களை இயக்கியுள்ள நிலையில் இப்போது காளிதாசர் எழுதிய புராணத்தில் உள்ள ஷகுந்தலம் எனும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஒரு புராணத் திரைப்படத்தை உருவாக்க உள்ளார். அந்த படத்தில் ஷகுந்தலை கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவும் மலையாள நடிகர் தேவ் மோகனும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

இந்த படத்தின் பூஜை நேற்று நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக அல்லு அர்ஜுன் கலந்துகொண்டார். பூஜை முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியாக சமந்தா ‘எனது 50 படங்களைக் கொண்ட திரைப்பட வாழ்க்கையில் எத்தனையோ கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், ஒரு புராணப்படத்திலோ அல்லது இளவரசியாகவோ நடிப்பது எப்போதும் கனவாக இருந்தது. இப்போது அது குணா மற்றும் தயாரிப்பாளர் தில்ராஜு ஆகியோரால் நிறைவேறியுள்ளது’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அன்பே அமுதே ஆருயிரே… போனி கபூருக்கு போஸ்டர் வெளியிட்ட அஜித் ரசிகர்கள்!