Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இமயமலையில் இருந்து வெளிநாடு கிளம்பிய சமந்தா!

இமயமலையில் இருந்து வெளிநாடு கிளம்பிய சமந்தா!
, புதன், 27 அக்டோபர் 2021 (16:36 IST)
நடிகை சமந்தா ஆன்மிக பயணங்களை இப்போது மேற்கொண்டு வருகிறார்.

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் கடந்த 2017ல் திருமணமான நிலையில் சமீபத்தில் அவர்கள் தங்கள் விவாகரத்தை அறிவித்துள்ளனர். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்துக்கு பலரும் பல காரணங்களை பேசி வந்த நிலையில், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என சமந்த கடந்த வாரம் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து விவாகரத்துக்கு சமந்தாதான் காரணம் என்றும், அவர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்தார் என்றும் குழந்தை பெற்றுக்கொள்வதை விரும்பவில்லை என்றும் அவர் மேல் அவதூறுகள் வைக்கப்பட்டன. இதையடுத்து அவருக்கு நெருக்கமானவர்கள் ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.

இதையடுத்து மன நிம்மதிக்காக சமந்தா இப்போது வெவ்வேறு ஆன்மிக தளங்களுக்கு சென்று வழிபாடு செய்து வருகிறார். அதில் ஒரு கட்டமாக தனது ஆடை வடிவமைப்பாளர் ஷில்பா ரெட்டியோடு தனி விமானத்தில் இமயமலைக்கு அருகில் உள்ள உத்தரகாண்ட் மற்றும் ரிஷிகேஷ் ஆலயம் ஆகிய இடங்களுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார். இதையடுத்து அங்கிருந்தபடியே அவர் இப்போது வெளிநாட்டுப் பயணம் கிளம்பியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய ரோஷினி!