Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சல்மான் கானுக்கு வந்த கொலை மிரட்டலால் நிறுத்தப்பட்ட சிக்கந்தர் ஷூட்டிங்!

சல்மான் கானுக்கு வந்த கொலை மிரட்டலால் நிறுத்தப்பட்ட சிக்கந்தர் ஷூட்டிங்!

vinoth

, வியாழன், 24 அக்டோபர் 2024 (12:43 IST)
தர்பார் தோல்விக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இருந்த ஏ ஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனை வைத்து தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் சென்னையில் தொடங்கியது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்துக்கு இடையிலேயே முருகதாஸ் அடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான சல்மான் கானோடு இணைந்து சிக்கந்தர் என்ற படத்தை உருவாக்க உள்ளார். இந்த படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய்க்கு மேல் என சொல்லப்படுகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜானுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜும், கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவும் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் சமீபத்தில் சல்மான் கானுக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஷூட்டிங் எப்போது தொடங்கும் எனத் தெரியாததால் முருகதாஸ் மும்பையிலேயே முகாமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவ்வாக இயங்கும் அஜித்… தினம் தினம் கொட்டும் அப்டேட்கள்!