Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமரன் படத்துல புதுமுகம் யாராவது நடிச்சா நல்லா இருக்கும்னு கமல் சொன்னார்- இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி!

Advertiesment
அமரன் படத்துல புதுமுகம் யாராவது நடிச்சா நல்லா இருக்கும்னு கமல் சொன்னார்- இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி!

vinoth

, வியாழன், 24 அக்டோபர் 2024 (10:33 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனத் தயாரிப்பில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றது. இந்த திரைப்படம் சென்னையைச் சேர்ந்த மறைந்த கேப்டன் முகுந்த் வரதராஜனின் கதை என்று சொல்லப்படுகிறது.

அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் ஏராளமான காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. நேற்று டிரைலர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் படம் பற்றி பேசியுள்ள இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி “இந்த படத்தை முதலில் சோனி பிக்சர்ஸ் நிறுவனம்தான் தயாரிக்க வந்தார்கள். நான் கமல் சார் இதில் ஷோ ரன்னராக இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் சோனி பிக்சர்ஸ் அவரையும் ஒரு தயாரிப்பாளராக சேர்த்துக் கொண்டார்கள். கமல்சார், திரைக்கதையைப் படித்துவிட்டு இதில் ஒரு புதுமுகம் நடித்தால் நன்றாக இருக்கும் என்றார். ஆனால் சிவகார்த்திகேயனிடம் கதை சொன்னதும் அவர் நடிக்க சம்மதித்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கே ஜி எஃப் 3 எப்போது வரும்? யஷ்ஷிடம் கேள்வி எழுப்பிய ஷுப்மன் கில்!