Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தன் மகனுடன் ஐஸ்வர்யா ராய் காதல் பற்றி பேசிய சல்மான் கானின் தந்தை!

தன் மகனுடன் ஐஸ்வர்யா ராய் காதல் பற்றி பேசிய  சல்மான் கானின் தந்தை!
, புதன், 7 அக்டோபர் 2020 (10:58 IST)
சல்மான் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவருக்கிடையேயான காதல் இந்தியாவே அறிந்தது.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்தது உலகமே அறிந்தது. இதற்காக சல்மான் கான் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஷாருக் கானை அறைந்தது எல்லாம் மிகப்பரபரப்பாக பேசப்பட்ட செய்தி. ஆனால் ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்தனர். பின்னர் ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். சல்மான் கான் அதன் பின்னரும் சிலரைக் காதலித்து எல்லாம் முறிந்து இப்போது வரை திருமணம் செய்துகொள்ளவில்லை.

இந்நிலையில் சல்மான் கானின் தந்தையும் திரைக்கதை எழுத்தாளருமான் ஜாவேத் கான் ‘என் மகனுடன் ஐஸ்வர்யா ராய் காதலில் இருந்தது உண்மைதான். ஆனால் அதன் பின்னர் இருவரும் பிரிந்துவிட்டனர்’ எனக் கூறியுள்ளார். சல்மான் கான் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததால்தான் ஐஸ்வர்யா ராய் அவரைப் பிரிந்ததாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன் கூட்டியே ரிலிஸாக உள்ளதா மாஸ்டர் திரைப்படம்! குழப்பத்தில் படக்குழு!