அப்படி என்ன காண்டு...? ரஜினியை மறைமுகமாக சீண்டிய எஸ்.ஏ. சந்திரசேகர்!

Webdunia
புதன், 28 ஆகஸ்ட் 2019 (18:24 IST)
இயக்குனரும், நடிகர் விஜயும் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் சமீபத்தில் ரஜினியை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். 
 
முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரகாஷ் ராஜ், சத்தியராஜ், சீமான், விஜய் போன்ற நடிகர்களை வைத்து வெற்றிப் படங்களை இயக்கியவர் சந்திரசேகர். 
 
சில மாதங்களுக்கு முன்னர் “டிராபிக் ராமசாமி” படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் சமீபத்தில் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதனின், 72வது பிறந்த நாள் விழாவில் கலந்துக்கொண்டார். 
அப்போது அவர் பேசியதாவது, தமிழன் எங்கு சென்றாலும் அவனுக்கு பெருமைதான். அமெரிக்காவில் பணியாற்றும் சாப்ட்வேர் வல்லுனர்கள் பலரும் தமிழர்கள்தான். மத்திய அரசு விருது கொடுத்தால் தான், தமிழனுக்கு பெருமை வரும் என்று அர்த்தமில்லை. 
 
தமிழன் என்று சொல்வதில் எப்போதுமே, ஒரு திமிர் உண்டு. அப்படிப்பட்ட தமிழன்தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்று பேசினார். தமிழந்தான் தமிழகத்தை ஆள வேண்டும் என அவர் கூறியது ரஜினியை விமர்சிக்கும் வகையில் உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எம்ஜிஆரையே எதிர்த்து கேள்வி கேட்டவரு மகேந்திரன்.. அவர பத்தி ராஜகுமாரனுக்கு என்ன தெரியும்?

நிதி அகர்வாலின் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

டியூட் படத்தில் இருந்து ‘கருத்த மச்சான்’ பாடலை நீக்கவேண்டும்… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்தி படத்துக்காக மூன்று மடங்கு சம்பளத்தைக் குறைத்துக் கொண்டாரா தனுஷ்?

அடுத்த கட்டுரையில்
Show comments