Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எஸ் ஜே சூர்யாவின் இயக்கத்தில் உருவாகும் ‘கில்லர்’- ஷூட்டிங் எப்போது?

எஸ் ஜே சூர்யாவின் இயக்கத்தில் உருவாகும் ‘கில்லர்’- ஷூட்டிங் எப்போது?
, சனி, 18 பிப்ரவரி 2023 (15:08 IST)
ஒரு காலத்தில் தென்னிந்திய மொழிகளின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக இருந்தவர் எஸ் ஜே சூர்யா. ஆனால் நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக அவர் இயக்கத்தை விட்டார். நடிகராக ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலும், அவரால் தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க முடியவில்லை.

சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் அவர் இறைவி படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இந்த முறை கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என எல்லா வகையான கதாபாத்திரங்களையும் கலந்து கட்டி நடித்தார். இப்போது அவர் நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை, பொம்மை, இரவாக்காலம் உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளனர். இப்போது சிவகார்த்திகேயனின் டான் மற்றும் சிம்புவின் மாநாடு ஆகிய படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பல ஆண்டுகளாக இயக்கம் பக்கம் திரும்பாமல் இருந்த எஸ் ஜே சூர்யா, இப்போது 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பேன் இந்தியா திரைப்படம் ஒன்றை இயக்கி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்துக்கு கில்லர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

இந்த படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது எஸ் ஜே சூர்யா தொடர்ந்து படங்களில் நடித்து வருவதால் கில்லர் படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாத்தி, பகாசூரன் என இரண்டு ரிலீஸ்… ஆனாலும் கெத்து காட்டும் டாடா!