Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராமாயணமும் மகாபாரதமும் சேர்ந்ததுதான் ராய்ன் படம்… எஸ் ஜே சூர்யா பகிர்ந்த தகவல்!

ராமாயணமும் மகாபாரதமும் சேர்ந்ததுதான் ராய்ன் படம்… எஸ் ஜே சூர்யா பகிர்ந்த தகவல்!

vinoth

, சனி, 20 ஜூலை 2024 (13:54 IST)
தனுஷின் 50 ஆவது படமான ராயன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தை தனுஷே இயக்கியுள்ளார். இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் ஜூலை 26 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

படத்தின் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ளன. விரைவில் படத்தின் டிரைலர் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டுள்ளது. படத்துக்கு ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதால் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது.

படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள எஸ் ஜே சூர்யா படம் குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். அதன்படி ராயன் படம் ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய இரண்டு காவியங்களில் உள்ள முக்கியமான சில விஷயங்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கன்னட இயக்குனரின் படத்தில் நடிக்கிறாரா சூர்யா?