விஜய்யின் ‘ஜனநாயகன்’ தமிழக ரிலீஸ் உரிமையைக் கைப்பற்ற மும்முரமாக செயல்படும் தயாரிப்பாளர்!

vinoth
வெள்ளி, 14 நவம்பர் 2025 (14:10 IST)
முழுநேர அரசியல்வாதியாகியுள்ள விஜய் தற்போது ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த படம்தான் தனது கடைசிப் படம் என அறிவித்துள்ளார். அதனால் படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். KVN புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க முக்கிய வேடங்களில் மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் வியாபாரங்கள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் தமிழக திரையரங்க விநியோக உரிமையை தயாரிப்பாளர் ராகுல் கைப்பற்றியதாக சொல்லப்பட்டது. ஆனால் கடைசி நிமிடத்தில் அவர் அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இப்போது தமிழக விநியோக உரிமை இன்னும் முடியாத நிலையில் அதைக் கைப்பற்ற பிரபல தயாரிப்பாளர் ராக்போர்ட் முருகானந்தம் முயற்சி செய்வதாக சொல்லப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கமல்ஹாசனின் ‘நாயகன்’ வெற்றியைத் தொடர்ந்து ‘தேவர் மகன்’ ரி ரிலீஸ்?

அஜித்- ஆதிக் படத்தில் இருந்து விலகினாரா தயாரிப்பாளர் ராகுல்?- களமிறங்குகிறதா ரிலையன்ஸ்?

அரசன் படத்தில் அனிருத்துக்கு சம்பளம் இல்லையா?... புத்திசாலித்தனமாக முடிவெடுத்த தாணு!

இயக்குனர் vs ஹீரோ… ஈகோ மோதலில் வென்றது யார்? – எப்படி இருக்கு துல்கர் சல்மானின் காந்தா?

அரசன் படத்தில் கவினுக்கு ஒரு வேடம் இருந்தது. ஆனால்..? – வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments