Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூவத்தூர் - த்ரிஷா விவகாரம்: பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி கண்டனம்..!

கூவத்தூர் - த்ரிஷா விவகாரம்: பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி கண்டனம்..!

Siva

, செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (18:38 IST)
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜு என்பவர் கூவத்தூரில் எம்எல்ஏக்களுக்கு நடிகைகள் சிலர் விருந்தாக்கப்பட்டதாக கூறிய நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கைகள் கூறப்பட்டுள்ளதாவது:
 
இன்றைய சமூக வளைதளங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து நீக்கப்பட்ட திரு.A.V.ராஜீ என்பவர் திரைத்துறையை குறித்து சில தரமற்ற, அவதூறுகளை கூறியிருக்கிறார். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நடந்த போட்டியில் 2017ல் கூவத்தூரில் நடந்ததாக நடிகை த்ரிஷா அவர்களை சம்மந்தப்படுத்தி ஒரு அவதூறை கூறியிருக்கிறார். அவதுமட்டுமல்லாது பல நடிகைகள் என்று பலரையும், நடிகர் திரு.கருணாஸ் அவர்களையும் சம்மந்தப்படுத்தி இந்த கீழ்தரமான செய்தியை வெளியிட்டுள்ளார்.
 
அரசியலில் ஒருவரை, ஒருவர் தாக்கி கொள்வதற்கு அவர்களுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் உங்கள் அரசியல் பிரச்சனையில் தேவையில்லாமல் ஆதாரமற்ற குற்றசாட்டுகளை, கீழ்தரமான அவதூறுகளை திரையுலக பெண்கள் மீது சுமத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறோம். செயலை, இத்தகைய அநாகரிகமான கீழ்தரமான செயலை, தென்னிந்திய  திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறோம்.
 
பஞ்சாயத்து தலைவரிலிருந்து, சட்டமன்ற உறுப்பினர் முதல் பாரத குடியரசின் தலைவராக திருமதி.முர்மு அவர்கள் வரை ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற, இந்த பாரத தேசத்தில் ”பெண்கள் மீதும் அவர்களின் பெண்மை மீதும்” நடத்தப்படுகின்ற இம்மாதிரியான அவதூறு தாக்குதலை இரும்பு கரம் கொண்டு களைய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுக்களுக்கு பணிவன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
 
இவ்வாறு  ஆர்கே செல்வமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மலிவு மனப்பான்மை கொண்ட ஏ.வி.ராஜு".. அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? காயத்திரி ரகுராம்!