Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காந்தாரா படத்துக்காக களரிப்பயட்டு கலையைக் கற்கும் ரிஷப் ஷெட்டி!

காந்தாரா படத்துக்காக களரிப்பயட்டு கலையைக் கற்கும் ரிஷப் ஷெட்டி!

vinoth

, வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (09:15 IST)
கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸான காந்தாரா திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று  இந்தியா முழுவதும் வசூலில் கலக்கியது. ஆனால் இந்த திரைப்படத்தில் காடுகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளதாக இடதுசாரியினர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.

இதையடுத்து இப்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இரண்டாம் பாகம் என சொன்னாலும் காந்தாரா கதையின் முன்கதைதான் படமாக்குகிறார்கள். படத்துக்கு காந்தாரா –சேப்டர் 1 எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி பேசிய இயக்குனர் ரிஷப் ஷெட்டி “காந்தாரா படம்தான் இரண்டாம் பாகம்.  இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைதான் அடுத்த பாகத்தில் சொல்லப்பட உள்ளது. இந்த படத்தில் தெய்வத்தின் பின்னணி பற்றி சொல்லப்படும்.” எனக் கூறியிருந்தார்.

படத்தின் பெருமபாலானக் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் முக்கியமானக் காட்சிகளுக்காக ரிஷப் ஷெட்டி களரிப்பயட்டு கலையைக் கற்று வருகிறாராம். அவர் களரிக் கற்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரசாந்த் நீல் & ஜூனியர் என் டி ஆர் இணையும் படத்தின் பட்ஜெட் இவ்வளவா?