Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் அப்பா கதையில் நானும் மகனும் நடிக்கவுள்ளோம்… ரவி மோகன் பகிர்ந்த தகவல்!

vinoth
வெள்ளி, 17 ஜனவரி 2025 (11:14 IST)
ஜெயம் ரவி நடித்த படங்கள் சமீபகாலமாக சரியாக ஓடாத நிலையில் காதலிக்க நேரமில்லை படமும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் அவர் சமீபத்தில் தனது பெயரை ரவி மோகன் என மாற்றி புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருப்பதாக அறிவித்துள்ளார்.

இப்போது அடுத்தடுத்து படங்களில் நடிக்கவுள்ள அவர் விரைவில் படம் இயக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர் “என் அப்பா மிகச்சிறப்பான கதை ஒன்றை வைத்துள்ளார். அதில் நானும் என் மகன் ஆரவ்வும் நடிக்கவுள்ளோம். ஆரவ் ஏற்கனவே ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடித்துள்ளான். அவனின் படிப்புப் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக இப்போது சினிமாவில் இருந்து விலகியுள்ளார். அவரின் பள்ளிப் படிப்பு முடிந்ததும் என் இயக்கத்தில் அந்த படத்தில் நடிப்பார்” எனக் கூறியுள்ளார்.

ஜெயம் ரவி நடிப்பில் அடுத்து ஜீனி உள்ளிட்ட படங்கள் வரிசையாக வெளிவரவுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவுக்குக் கமல்ஹாசனுக்கு அழைப்பு!

வருகிறது பிச்சைக்காரன் மூன்றாம் பாகம்… அப்டேட் கொடுத்த விஜய் ஆண்டனி!

பழம்பெரும் நடிகர் ஜி சீனிவாசன் காலமானார்!

ரூ.6000 கோடி சினிமாவில் முதலீடு செய்யும் நிறுவனம்.. பெரும்பாலும் பக்தி படங்கள் தான்..!

சிம்பு - வெற்றிமாறன் படத்தில் ‘வடசென்னை’ படத்தின் 3 கேரக்டர்கள்.. தனுஷ் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments