ரவி மோகன் நடிப்பில் அடுத்தடுத்து வெளியானப் படங்கள் அனைத்தும் தோல்விப் படங்களாக அமைந்தன. இதற்கிடையில் அவரின் விவாகரத்து செய்தி வெளியாகி அவரைச் சுற்றி சர்ச்சைகள் எழுந்தன. கடந்த ஆண்டு ரிலீஸான அவரின் பிரதர் திரைப்படம் மிக மோசமான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றது.
இப்போது அவர் கைவசம் ஜீனி, கராத்தே பாபு மற்றும் பராசக்தி ஆகிய படங்கள் உள்ளன. இதில் ஜீனி படம் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பராசக்தி படத்தில் வில்லனாக நடிக்க, கராத்தே பாபு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
டாடா இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் கராத்தே பாபு படத்தின் அறிமுக முன்னோட்ட வீடியோ சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. தற்போது படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படம் குறித்து ரவி மோகன் நம்பிக்கையுடன் பேசியுள்ளார். அதில் “கராத்தே பாபு திரைப்படம் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. அந்த படத்தில் இருப்பது போல என்னை நானே பார்த்தது கிடையாது. இன்னும் ஒரு சிலக் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளது. இந்த படம் என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.