வெற்றிமாறன் தனுஷ் வெற்றிக்கூட்டணியில் உருவான வடசென்னை திரைப்படம் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்த படம் மொத்தம் 3 பாகங்களாக உருவாக இருந்த நிலையில் முதல் பாகம் மட்டுமே ரிலீஸானது. அடுத்த பாகங்களுக்கான அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இது குறித்து ரசிகர்கள் அவ்வப்போது வெற்றிமாறன் மற்றும் தனுஷ் ஆகியோரிடம் கேள்வியெழுப்பி ஆர்வத்தை வெளியிட்டு வந்தனர்.
இதற்கிடையில் வெற்றிமாறன் வடசென்னை 2 படம் வராது என்பதை சூசகமாக சில நிகழ்ச்சிகளில் கூறிவந்தார். இந்நிலையில் இப்போது குபேரா படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தனுஷ் வடசென்னை 2 படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு தொடங்கும் என கூறியுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் வேல்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் தனுஷ் ஒரு படம் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அந்த படம் வடசென்னை 2 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.