Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் மொழிப் பேதம் பார்ப்பதில்லை… அது மட்டும் அமைந்தால் ஓடோடி வந்துவிடுவேன் – ராஷ்மிகா மந்தனா!

Advertiesment
ராஷ்மிகா மந்தனா

vinoth

, திங்கள், 2 ஜூன் 2025 (13:33 IST)
இப்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான்.  கிரிக் பார்ட்டி எனும் படத்தில் நடித்த அவர் அதன் பின்னர் அதிகமாக கன்னட படங்களில் நடிக்கவில்லை. அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர்.

ஆனால் பெரிய நடிகையானதும் ராஷ்மிகா கன்னட படங்களில் நடிப்பதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு அவர் மேல் வைக்கப்படுகிறது. இதனால் கர்நாடகாவில் அவர் மேல் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல் பேன் இந்தியா படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று சென்னையில் நடந்த குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அவர் பேசும்போது “நான் தமிழ், தெலுங்கு, இந்தி என்றெல்லாம் பார்ப்பதில்லை. நல்ல கதைகளில் நடிக்கிறேன். தமிழில் இருந்து நல்ல கதை வந்தால் உடனடியாக இங்கு ஓடோடி வந்துவிடுவேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்களால ஒரு செங்கல்ல கூட நகர்த்த முடியாது! ஹேட்டர்களுக்கு தனுஷ் நச் பதில்!