Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாரத்தான் வாழ்க்கைக்கு ஒரு சிறிய முற்றுப்புள்ளி – லாக்டவுனால் மகிழ்ச்சியான ராஷ்மிகா மந்தனா!

மாரத்தான் வாழ்க்கைக்கு ஒரு சிறிய முற்றுப்புள்ளி – லாக்டவுனால் மகிழ்ச்சியான ராஷ்மிகா மந்தனா!
, சனி, 30 மே 2020 (07:35 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா லாக்டவுனால் கிடைத்த மகிழ்ச்சி பற்றி பேசியுள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் லாக்டவுன் காலங்களில் சமூகவலைதளங்கள் மூலமாக ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பேசிய அவர், லாக்டவுன் நாட்களால் அடைந்த மகிழ்ச்சி பற்றி பேசியுள்ளார்.

அதில் ‘என் 18 வயதில் இருந்து வாழ்க்கை ஒரு மாரத்தான் ஓட்டத்தைப் போல இருந்தது. போட்டி முடிந்தது என நினைக்கும் போதெல்லாம், மீண்டும் தொடங்கிவிடும். இதை நான் ஒரு புகாராகக் கூறவில்லை. இத்தனை நாட்கள் நான் வீட்டில் இருந்ததே இல்லை. பள்ளிப்பருவம் தொடங்கி உயர்கல்வி முடிக்கும் வரை விடுதியில்தான் தங்கியிருந்தேன். இந்த ஊரடங்கில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நான் வீட்டிலேயே இருக்கிறேன். நாங்கள் யாரும் இப்போது வேலையைப் பற்றி பேசுவதே இல்லை. நான் இத்தனை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்வேன் என்று ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை.’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்து அமைப்பு பற்றிய சர்ச்சை பேச்சு..பிரபல நடிகை மீது புகார்