Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உண்மையை மறைத்தாரா அல்லது உண்மையே தெரியாதா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா…!

Advertiesment
ராஷ்மிகா மந்தனா

vinoth

, செவ்வாய், 8 ஜூலை 2025 (14:02 IST)
கன்னட சினிமாவில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய ராஷ்மிகா தற்போது பேன் இந்தியா நடிகையாக அறியப்படுகிறார். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர். பாலிவுட்டில் அவர் நடித்த அனிமல் உள்ளிட்ட படங்கள் பெருவெற்றி பெற்றன.

சமீபகாலமாக ராஷ்மிகா எந்தவொரு கன்னட படத்திலும் நடிக்கவில்லை. இதனால் அவர் கன்னட திரையுலகில் பலத்த எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார். ஆனாலும் அவரின் மார்க்கெட் இப்போது உச்சத்தில் இருப்பதால் அவர் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் அதிகமாகக் கவனம் செலுத்தி வருகிறார்.

அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வரும் ராஷ்மிகா சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் ‘நான் சார்ந்த கொடவா சமூகப் பின்னணியில் இருந்து யாரும் சினிமாவுக்குப் பெரிதாக வந்ததில்லை. அந்த சமூகத்தில் இருந்து வந்த முதல் பெண் நடிகை நான்தான்” எனத் தெரிவித்தார். ஆனால் கன்னட சினிமாவில் கொடவா சமூகத்தில் இருந்த பல நடிகைகள் வந்து நடித்துள்ளனர். ஆனால் அதை மறைத்து ராஷ்மிகா இப்படி பேசியதாக அவர் மேல் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமீர் கானுக்கும் எனக்கும் காட்சிகள் இல்லை… கூலி பட அப்டேட்டைப் பகிர்ந்த பிரபல நடிகர்கள்!