இப்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர்.
இப்போது அவர் பாலிவுட்டில் அனிமல், தெலுங்கில் புஷ்பா 2, தமிழில் ரெயின்போ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் தெலுங்கில் அடுத்து நடித்துள்ள கேர்ள் பிரண்ட் படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்த நிலையில் அவர் உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக விலகிவிடவே ராஷ்மிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை ஜிஏ2 பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிகிறது.
காதல் தோல்வியில் ஒரு பெண் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சொல்லும் படமாக கேர்ள் ப்ரண்ட் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படம் ரிலீஸாகவுள்ள நிலையில் இந்த படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்துள்ளாராம் ராஷ்மிகா. படத்தின் கதை மிகவும் பிடித்ததால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் தயாரிப்பாளர்கள் படத்தின் ரிலீஸுக்குப் பிறகு அவருக்கான சம்பளத்தை வற்புறுத்தியாவது கொடுப்போம் எனக் கூறியுள்ளனர்.